தமிழில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த பேபி சாராவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 'சித்திரையில் நிலா சோறு, சைவம், விழித்திரு' போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.
அத்தோடு 'பொன்னியின் செல்வன்' படத்தில், நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்யின் சிறு வயது கதாபாத்திரத்தில் கூட பேபி சாரா தான் நடித்திருந்தார் என்பது குறிபிடித்தக்கது.
இந்நிலையில் தற்போது பேபி சாரா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தமிழ் சினிமாவில் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய் தான் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இது தொடர்பாக ஏ.எல்.விஜய் கூறுகையில் "பொன்னியின் செல்வன்-2 படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அந்தவகையில் சாராவை நான் 2025-ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேபி அனிகாவை தொடர்ந்து பேபி சாராவும் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!