• Sep 20 2024

ஜெயிலிலிருந்து வெளியே வந்த வெற்றி.. நாளை முதல் 2-ஆம் பாகமா..? தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அதிரடித் திருப்பம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்து சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. 


அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் வெற்றி-அபி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பும் ஜோடியாகவே இருந்து வருகின்றது. ஆரம்பத்திலிருந்தே இந்த சீரியலில் பல அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் இந்த சீரியலில் பவானியை வெற்றியின் அண்ணி கொலை செய்து விட்டார். ஆனால் அந்தக் கொலை பழியை வெற்றி ஏற்றுக்கொண்டு அண்ணிக்குப் பதிலாக தான் ஜெயிலிற்கு செல்கின்றார் வெற்றி. பின்பு நீதிமன்றத்தினால் வெற்றிக்கு 6ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதன்படி சிறை தண்டனைக்காலம் காலம் முடிவடைந்து வெற்றி ஜெயிலிலிருந்து வெளியே வரும் வகையில் அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் "புதிய அத்தியாத்துடன் தென்றல் வந்து என்னைத் தொடும்" எனவும் அந்தப் ப்ரோமோவில் கூறப்பட்டிருக்கின்றது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நாளை முதல் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலினுடைய 2ஆம் பாகம் ஆரம்பமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதனை சற்று உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சீரியலின் கதாநாயகி அபியும் குழந்தை ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 


எனவே அந்தக் குழந்தை வெற்றி-அபியின் உடைய குழந்தையாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். எது எவ்வாறாயினும் அடுத்து என்ன நடக்கப் போகுது என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement