பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஒரு திரைப்படமே 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய மொழியில் 'டப்' செய்து அந்நாட்டில் கடந்த மாதம் 8-ஆம் தேதி 700-இற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படமானது தற்போது வெளியாகி 25 நாட்கள் கடந்து விட்ட போதும் இதற்கான மவுசு ரஷ்யாவில் இன்னமும் குறையவில்லை.
அதாவது இதற்கு சான்றாக இந்த படத்தின் வசூல் அந்த நாட்டில் இதுவரை ரூ.13 கோடியை கடந்துள்ளது. மேலும் இப்படமானது ஏற்கனவே இந்தியாவில் ரூ.350 கோடியை தாண்டிய நிலையில் ரஷ்யாவிலும் வெற்றி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்களாம். அதுமட்டுமல்லாது தற்போது புஷ்பா படத்தின் 2-ஆம் பாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!