• Sep 20 2024

ஷூட்டிங் முடிந்ததும் மருத்துவமனைக்கு பதறியடித்து செல்லும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை....எல்லாமே சீரியலால் வந்த வினை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 சீரியல் ஷூட்டிங்கை முடிந்த கையேடு மருத்துவமனைக்கு ஓடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை எனும் தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'  கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள்.மேலும்  அந்த குடும்பத்திற்கு வாழ வந்த மற்ற மருமகள்களையும் மீட்க போராடுவதை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.


இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் சமீபத்தில் இணைந்தவர் தான் விஜே காயத்ரி. இவர் ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.இவர் இந்த சீரியலின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜே-வாக பிரபலமான காயத்ரி 'அயலி' வெப் சீரிஸ் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனினும்  தற்போது சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில், குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும், கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு, அவரின் தோழி மூலம் கிடைத்துள்ளதாம். மேலும் இந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு நடைபெற்ற போது, காயத்ரி தன்னுடைய மாடர்ன் போட்டோஸ் சிலவற்றை அனுப்பியதாகவும் இதை பார்த்தவுடன் இயக்குநர் இவர் கண்டிப்பாக, இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என கூறியுள்ளார். இதன் பின்னர் அயலி வெப் தொடரில் நடித்த போது எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார்.


இதைப் பார்த்த திருச்செல்வம் மறுநாளே ஷூட்டிங்கிற்கு வர சொல்லியுள்ளார். இவர் அறிமுகமாக முதல் சீனிலேயே... மாரிமுத்து, சத்யப்ரியா, பிரியதர்ஷினி என இந்த சீரியலில் நடிப்பில் பொளந்து கட்டும் அனைத்து நடிகர்களும் இருந்துள்ளனர். இவர்கள் முன் எப்படி நடிப்பது என ஜான்சி ராணி ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம். எனினும் தைரியத்தை வரவைத்து கொண்டு நடித்துள்ளார்.

அத்தோடு  இவர் நடித்த முதல் சீனில், குணசேகரனுடன் பேசிக் கொண்டே இருக்கும்போது, தன்னுடைய இடுப்பில் இருக்கும் வெற்றிலையை குணசேகரனின் கையில் கொடுத்து, தன்னுடைய மகனுக்கு ஆதரையை நிச்சயம் செய்வது போல்  வெற்றிலை பாக்கு மாற்றுவது போல் சீன் இருக்கும். எனவே இந்த கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கூறிய போது, இடுப்பில் வெற்றிலை இருந்தால்... நானும் வெற்றிலை பாக்கு போட்டுகொண்டு நடித்தால் தானே நன்றாக இருக்கும். வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்கள் தானே எப்போதும் தங்களுடைய இடுப்பில் வெற்றிலை - பாக்கு வைத்திருப்பார்கள் என சொன்னேன்.


அதற்கு இயக்குநரும் அசால்டாக, உங்களுக்கு ஓகே என்றால் போட்டுக் கொள்ளுங்கள் என சொன்னார். இதற்க்கு முன்னர் வெற்றிலை - பாக்கு போட்டு அனுபவம் இல்லாத விஜே காயத்ரி, இந்த கேரக்டருக்காக  வெற்றிலை பாக்கு போட்டவுடன் வாய் முழுவதும் வெந்து போய் உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் இருந்ததால், இந்த இரண்டு நாட்களுமே அவர் வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு நடித்துள்ளார். எனவே வாயில் எரிச்சல் தாங்க முடியாமல், அந்த இரண்டு நாட்களுமே ஷூட்டிங் முடிந்ததும் மருத்துவமனைக்கு ஓடியதாக, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் முதல் நாளில் தன்னுடைய நடிப்பை பார்த்து வியந்து, மாரிமுத்து தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement