இந்தியத் திரையுலகில் இண்டர் நஷனல் கிரஷாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் மட்டுமல்லாது இவர் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மற்ற நடிகைகளை போலவே இவரும் அடிக்கடி காதல் கிசு கிசுக்களில் சிக்கி வருகின்றார்.
அந்தவகையில் ராஷ்மிகாவும் நடிகர் விஜய்தேவரகொண்டாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளி வந்தன. அதாவது இவர்கள் இருவரும் கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போது காதல் பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாது விஜய் தேவர்கொண்டாவின் குடும்ப நிகழ்ச்சியில் அந்த வீட்டு பெண் போலவே ராஷ்மிகா கலந்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவரும் ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்றுவந்த புகைப்படங்களும் வெளியாகி காதலை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்தது.
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் தேவர்கொண்டாவுடன் காதலை ராஷ்மிகா முறித்துக்கொண்டு விட்டதாகவும் இதனையடுத்து புதிதாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகிலும் இணைய தளங்களிலும் தகவல் தீயாக பரவி உள்ளது.
மேலும் சமீபத்தில் கூட இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது விமானநிலையத்திலும் ராஷ்மிகாவையும் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸையும் ஜோடியாக காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!