முதலில் வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் பின்னர் குறும்படங்கள் இயக்கினார். தற்போது திரைப்படங்களை இயக்கி வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் தான் முடிவடைந்தது.
சமீபத்தில் லியோ படத்தின் கதை ரஜினியின் பாட்ஷா கதை போல இருக்கும் என்று சில தகவல்கள் வெளியானது. ஆனால் இப்படம் கைதி திரைப்படம் போல இருக்கும் என லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
இப்படியான நிலையில் இன்னுமொரு தகவலைக் கூறி இருக்கிறார். அதாவது லியோ படத்தை முடித்தவுடன் இன்னொரு படத்தை இயக்கவுள்ளளேன். அதன் பின்னரே கைதி 2 படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் வாய்ப்புக் கிடைத்தால் நடிகர் அஜித்தை வைத்தும் திரைப்படத்தை இயக்குவேன் லோகேஷ் கனகராஜ் கோவையில் நடந்த நிகழ்வொன்றில் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!