• Sep 20 2024

தனத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்- தலை சுற்றி நடுவீதியில் விழப் பார்த்த மூர்த்தி- கோபத்தில் முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி ஒருவரிடம் பேசிட்டு இருக்கின்றார். அந்த நேரம் அதே வழியால் ஜீவா வரும் போது மீனா போன் பண்ணி ஜீவாவை எங்கு இருக்கின்றாய் என்று விசாரிக்கின்றார். இப்போது ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸிற்கு போய்ட்டு அப்பிறம் உங்க அப்பாட சுப்பர் மார்க்கெட்டுக்கு போறேன் சரியா என்று சொல்லிட்டு வைக்கிறார்.


தொடர்ந்து பைக்கில் வர மூர்த்தி பைக்கை எடுப்பதற்காக ஏறும் போது தலை சுற்றி கீழே விழ பார்க்க ஜீவா ஓடிப் போய் பிடிக்கின்றார். பின்னர் என்ன ஆச்சு என்று விசாரிக்க மூர்த்தி சாப்பிடாமல் வந்த விஷயத்தை சொல்ல ஜீவா உடனே கதிரின் கடைக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கின்றார்.

அங்கே கதிரின் மாமா தான் சாப்பாடு பரிமாறுகின்றார்.இருவரும் சாப்பிடும் போது மூர்த்தி ஜீவாவிடம் கரெக்டான டைம்ல எப்பிடிடா அங்க வந்த என விசாரிச்சு இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.பின்னர் ஐஸ்வர்யாவின் சித்தி தனம் வீட்டுக்கு வந்து ஐஸ்வர்யாவிடம் கடன் காசு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்.

அப்போது ஐஸ்வர்யா 25 ஆயிரம் பணத்தைக் கொடுக்க அதை முல்லை பார்த்து விடுகின்றார். இரு்தாலும் ஐஸ்வர்யா சமாளித்து விட முல்லை தனத்திடம் சென்று ஐஸ்வர்யா பணம் கொடுத்த விஷயத்தைச் சொல்லி ஐஸ்வர்யா அத்தாச்சியிடம் கடன் வாங்கியிருக்கிறா நீங்க கூப்பிட்டு விசாரியுங்க என்று சொல்ல தனமும் அத்தாச்சியிடம் விசாரிக்கின்றார்.


முதலில் சொல்ல மறுத்த ஐஸ்வர்யாவின் சித்தி பின்னர் உண்மை எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றார்.இதனால் கோபமடைந்த தனம் ஐஸ்வர்யாவைக் கூப்பிடடு விசாரிக்க ஐஸ்வர்யாவும் வளைகாப்புக்காக காசு வாங்கினேன் என்று சம்மதிக்க தனம் கண்ணனையும் வரவைத்து இருவரையும் கேட்கின்றார் இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement