விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரைியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது எல்லோரும் புது வீட்டுக்கு வந்த சந்தோசத்தில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஐஸ்வர்யா கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறவங்க எவ்வளவு கஸ்டப்படுறாங்க தெரியுமா? அப்பிடியொரு நோயால் பாதிக்கப்பட்டவங்க நம்ம வீட்டிலையும் இருக்கிறாங்க என்று சொல்லி வீடியோ போடுகின்றார்.
அந்த வீடியோவைப் பார்த்த மூர்த்தி குடும்பம் அனைவரும் அதிர்ச்சியடைவதோடு மீனாவின் பெற்றோர் மீனாவிடம் சென்று என்ன ஆச்சு என்று கேட்கின்றனர். அதே போல தனம் மற்றும் முல்லையின் குடும்பத்தினரும் என்ன ஆச்சு யாருக்கு கான்சர் என்று விசாரிக்கின்றனர்.
அப்போத மூர்த்தி தனத்திடம் யாருக்கு கான்சர் என்று கேட்கின்றார் அதற்கு ஐஸ்வர்யா நீங்க எத்தனை முறை கேட்டாலும் அக்கா சொல்லமாட்டாங்க, ஏனென்றால் அவங்களுக்கு தான் கான்சர் என்று சொல்கிறார். இதைக் கேட்ட மூர்த்தி அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!