• Sep 20 2024

மீனா சொன்னதைக் கேட்டு கதறி அழும் ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் உறைந்த முல்லை- சமாளிக்க முடியாமல் தவிக்கும் தனம்- Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லை தனத்தின் குழந்தைக்கு பால் கொடுப்பதைப் பார்த்த ஐஸ்வர்யா தொடர்ந்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்பதால் முல்லையும் மீனாவும் ஏதேதோ கதை எல்லாம் சொல்லி சமாளித்து அனுப்பி விடுகின்றனர். தொடர்ந்து எல்லோரும் சாப்பிட இருக்கும் போது தனத்தை எந்தவொரு வேலையும் செய்ய விடாமல் முல்லையும் மீனாவும் சாப்பாடு பரிமாறுகின்றனர்.


இதைப் பார்த்த மூர்த்தி என்னப்பா தனத்தை எந்த வேலையும் பண்ண விடாமல் நீங்களே எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கிறீங்க என்று கேட்கின்றார். அதற்கு மீனா உங்க கிட்ட நல்ல பெயர் எடுக்கத் தான் மாமா நாங்களே பண்ணிட்டு இருக்கின்றோம் என்று சாமாளிக்கின்றார். அப்போது கதிர் கண்ணனையும் சாப்பிடக் கூப்பிட கண்ணன் வந்து தான் பிறகு சாப்பிடுகின்றேன் என்று சொல்கின்றார்.

அப்போது மூர்த்தி எல்லோர் கூடவும் இருந்து சாப்பிட்டால் என்னவாம், பரிமாறுகிறவங்களும் பாவம் தானே எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டால் என்ன என்று கேட்கின்றார். இதனால் கண்ணன் கவலைப்பட்டுக் கொண்டே சாப்பிட இருக்கின்றார். இதைப் பார்த்த மூர்த்தி நம்பிக்கையோட இருந்தால் எல்லாம் சரி ஆகிடும் என்று கண்ணனுக்கு சொல்ல தனம் அதை நீங்க அவனுக்கே நேராக சொல்லிட வேண்டியது தானே என்று கேட்க மூர்த்தி சமாளிக்கின்றார்.


பின்னர் விடிந்ததும் செக்கப்புக்கு போவதற்காக மீனா முல்லை தனம் மூவருமே ரெடி ஆகிட்டு இருக்கின்றனர். இந்த முறை என்ன சொல்லிட்டு போறது என்று தெரியாமல் யோசிக்கின்றனர். அப்போது முல்லை தடுப்பூசி போடப் போறோம் என்று சொல்லிட்டு போக வேண்டியது தான் என்று பிளான் போடுகின்றனர்.

இவர்கள் கதைப்பதையெல்லாம் வெளியில் நின்று ஒட்டுக் கேட்ட ஐஸ்வர்யா, முல்லையும் மீனாவும் வர எங்க போகப் போறீங்க ரெண்டு பேரும் அதுவும் தடுப்பூசி போடப் போறோம் என்று பொய் சொல்லிட்டு எங்க போறீங்க நீங்க சொல்லலை என்றால் நான் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லிடுவேன் என்று சொல்கின்றார்.


இதனால் முல்லையும் மீனாவும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை, இதனால் பொறுக்க முடியாத முல்லை தனத்திற்கு மார்புப் புற்று நோய் என்று சொல்லி விடுகின்றார். இதைக் கேட்ட ஐஸ்வர்யா கதறி அழுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. அடுத்து வரும் ப்ரோமோவில் ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிலும் ஒரு வருக்கு கான்சர் நோய் இருக்கு என்று அழுத படியே ஒரு வீடியோ போடுகின்றார். இதனை மூர்த்தி, முல்லையின் பெற்றோர், ஜீவா என எல்லோரும் தனித்தனியாக தாம் இருக்கும் இடங்களில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement