• Sep 20 2024

ஐஸ்வர்யா எல்லாம் வேண்டாம்... அப்போ விவாகரத்துக்கு காரணமே இந்த நடிகைகள் தானா..? என்ன தனுஷ் சேர் இப்படி பண்ணிட்டீங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஒரு நடிகனாக அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கி வருகின்ற ஒருவரே நடிகர் தனுஷ்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், மாஸ் நட்சத்திரமாகவும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றார். 


தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் கால் பதித்திருக்கின்றார் தனுஷ். அந்தவகையில் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரின் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்' என்ற படம் வெளியாகி இருக்கின்றது.


அப்படமும் வெளியாகிய நாள் முதல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற மூன்று நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர். 


அந்தவகையில் ஏற்கெனவே 'தனுஷ் என்றாலே நடிகைகளுடன் நெருக்கம் தான்' என்ற ஒரு கருத்து இணையத்தில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தான் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் 'வடசென்னை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தினைத் தொடர்ந்து தான் இவர் பாப்புலர் ஆகியிருக்கிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இற்கு இடையில் நடந்த ஒரு சில சம்பவங்கள் பற்றிய கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 


அதாவது தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டிருந்தாராம். ஆனால் அதற்கு தனுஷ் உடனே "உன்கூடவா ஐய்யய்யே? நோவே என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன்" என்று முகத்தில் அடித்த போன்று சிரிச்சுக்கிட்டே கூறியிருந்தாராம்.


தனுஷ் கூறிய அந்த நடிகைகளின் பெயரை ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் பப்ளிக்கில் அவர் முன்பே கூறியுள்ளார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷிடம் "அமலா பால், நயன் தாராவுடன் தான் நடிப்பேன்" என்று கூறியுள்ளார் தனுஷ்.


மேலும் இந்த விடயம் தான் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் முன்னர் ஒரு சில கருத்துக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement