• Sep 20 2024

தனம் மற்றும் மீனாவின் நடவடிக்கையைப் பார்த்து சந்தேகப்படும் ஐஸ்வர்யா- பதறிப்போன மூர்த்தி- குழப்பத்தில் முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலில் தனத்தைப் பற்றிய உண்மையை அறிந்த மீனா தனத்தைப் பார்ப்பதற்காக வீட்டிற்குச் செல்கின்றார். வீட்டிற்குச் சென்ற தனத்திடம் முல்லையும் ஐஸ்வர்யாவும் சித்தி நல்லா இருக்கிறாங்களா என்ற கேட்க அவங்க ரொம்ப நல்லா இருக்கிறாங்க எனக்கு தலை வலிக்குது என்று கூறி விட்ட உள்ளே சென்று விடுகின்றார்.


தொடர்ந்து தனம் வீட்டுக்கு வரும் மீனா முல்லையிடம் நலம் விசாரித்து விட்டு அக்கா எங்க என்று கேட்கும் போது முல்லை, அக்கா தலைவலிக்குது என்று உள்ளே இருக்கிறாங்க என்று சொல்கின்றார். தொடர்ந்து மீனா தனத்திடம் சென்று ஹாஸ்பிட்டலில் நான் டாக்டர்கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.

வாங்க அக்கா டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் உங்களுக்கு ஒன்றும் இருக்காது என்று சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகின்றார். இவர்கள் இருவரும் எங்கே போகின்றார்கள் என்று ஐஸ்வர்யா கேட்க மீனா கயல் ஒரே பெரியம்மாவை பார்க்கனும் என்று அழுதிட்டு இருக்கிறா அதான் என்னோட வீடடக்கு கூட்டிட்டு போகின்றேன் என்று கூறுகின்றார்.

பின்னர் இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு போய் டெஸ்ட் எடுக்கிறதுக்காக இருக்கும் போது தனம் பயப்பிடாமல் இருக்க மீனா ஆறுதல் சொல்கின்றார். அத்தோடு ஹாஸ்பிட்டல் கோயிலில் இருக்கும் சாமியிடம் மீனா அக்காவுக்கு எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லி வேண்டுகின்றார். பின்னர் டெஸ்ட் ரிசல்ட் நாளைக்கு தான் வரும் என்று சொன்னவுடன் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகின்றனர்.


வீட்டுக்கு வந்ததும் மூர்த்தி கயல் எப்படி இருக்கிறா என்று கேட்க தனம் அதை மீனாவிடம் கேளுங்க என ஏதேதோ உளற ஐஸ்வர்யா நீங்க ரெண்டு பேருமே எதையோ மறைக்கிறீங்க என்று சொல்ல மூர்த்தியும் தனத்திடம் நீ நல்லா இருக்கிற தானே உடம்புக்கு எதுவும் இல்லை தானே என்று கேட்க தனம் அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா நான் நல்லாத் தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே செல்கின்றார்.

பின்னர் தனம் தனியாக இருக்க மீனா, சென்று அக்கா நான் நைட்டு இங்கையே இருக்கவா என்று கேட்க வேணாம் நீ போ ஏற்கனவே எல்லோரும் நம்மள சந்தேகப்படுறாங்க நீ போய்ட்டு வா என்று சொல்ல மீனாவும் ஆறுதல்ப்படுத்திட்டு வீட்டுக்க போக தனம் யோசிக்கினறார். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement