• Sep 20 2024

கவர்ச்சி உடையில் ரசிகர்களைக் கவரும் ஐஸ்வர்யா மேனன்…வெளியான புகைப்படங்கள்..!என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவிலே தமிழ், மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் 'காதலில் சொதப்புவது எப்படி', 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 'தமிழ்ப்படம்-2' ஆகும். இதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து பிரபல நடிகரும் இயக்குநரும் ஆகிய சுந்தர்.சி யின் தயாரிப்பில் வெளியாகி இருந்த 'நான் சிரித்தால்' படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதாவது இந்தப் படத்தில் 'அன்கிதா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் கிளாமர் ரோலில் நடித்து பல இளைஞர்கள் மனதிலும் குடி கொண்டார்.

அதுமட்டுமன்றி தற்போது நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் நடிப்பில் 'வேழம்' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் இவருக்கு சிறந்த விமர்சனங்களையே பெற்றுக் கொடுத்தது.

இவ்வாறு பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற இவர் தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றார். இவ்வாறாக ஐஸ்வர்யா மேனன் படங்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். இவரின் கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.

இந்த நிலையில் இவர் தற்போதும் படு கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது லக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு அப்புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement