தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியான இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக இவர் நடித்த ஜுன்ஸ் ,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன், ராவணன் திரைப்படங்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இது தவிர தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அந்த வகையில் இறுதியாக இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
இந்த நிலையில் இவருடைய மகள் ஆராதனா இன்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். அவருக்கு உதட்டு முத்தம் கொடுத்தவாறு ஐஸ்வர்யா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!