• Sep 20 2024

ஐஸ்வர்யா ராயின் உலக அழகிப் பட்டத்தைக் காலி செய்ய வந்த மகள் ஆரத்யா... வெளியான வீடியோவால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'இருவர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இருப்பினும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தார்.

உலக அழகியாகத் திகழ்ந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக ஒரு மகளும் உள்ளார்.


திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்-2' வெளியானது. 

ஐஸ்வர்யா ராய் எந்தளவிற்கு அழகாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு இவரின் மகள் ஆரத்யாவும் ரொம்பவே அழகாக இருக்கின்றார். அதுமட்டுமல்லாது நாளொரு வண்ணமாகவும், பொழுதொரு மேனியாகவும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றார். இந்நிலையில் ஆரத்யாவிற்கு தற்போது 11 வயது ஆகின்ற நிலையில், அவர் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஆரத்யா அம்மாவை விட ரொம்ப அழகாக இருப்பதாகவும், அழகில் அம்மாவின் உலக அழகிப் பட்டத்தையே காலி பண்ணி, அந்தப் பட்டத்தை ஆரத்யா கூடிய சீக்கிரமே பெற்றுக் கொள்வார்" எனவும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement