இந்திய சினிமாவில் 'பிரேமம்' என்ற படத்தில் அறிமுகமாகியதிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மலர் டீச்சராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நம்ம மலர் டீச்சர் தற்போது 'கார்கி' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கின்றார்.
இப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஆசிரியையாகவும், தன் தந்தை மீது போடப்பட்டிருக்கும் வழக்கிற்கு எதிராகப் போராடும் ஒருவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இந்தநிலையில் இந்தக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக நடிப்பதற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்ற தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பான தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கின்றார். அதாவது இது தொடர்பில் அவர் கூறுகையில் "கார்கி படத்தினுடைய கதையையும் கதாபாத்திரத்தையும் கேட்டதும் என்னை விட பெரிய நடிகை ஒருவர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதனால் நான் தான் சாய் பல்லவியின் பெயரை பரிந்துரைத்தேன்" எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் இப்பவும் நம்ம சினிமாவில தனக்கு வந்த சான்ஸை இன்னொரு நடிகைக்கு விட்டுக் கொடுக்கிற அளவிற்கு மனிதாபினம் படைத்த நடிகைகள் வாழ்ந்து வருகின்றனரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்தவள் நான்; நடிகை டாப்ஸி
- தனுஷ்-அனிருத் கூட்டணியின் “மேகம் கருக்காதா” பாடல் வெளியீடு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- நடிகர் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு காரணம் அவரது காதலி ரியா தான்…குற்றச்சாட்டை முன்வைத்த போலீஸார்
- கிரிக்கெட் வீரர் ராகுலுக்கும் பிரபல வாரிசு நடிகைக்கும் திருமணமா?…விளக்கம் அளித்த நடிகர்
- சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தைக் கைப்பற்றிய நண்பன்…. யார் தெரியுமா?
- வெள்ளிவிழா நாயகன் மோகனின் பொற்காலம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!