பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனது கணவரும் நடிகருமான தனுஷைப் பிரிந்ததை அடுத்து அறிவிப்பிற்கு பிறகு இவர் தன்னுடைய உடல்நலனில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.
இது தவிர தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடனும் தனது நேரத்தை செலவழித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றைய தினம் இவர் தன்னுடைய வீட்டில் மகன்களுடன் விநாயர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.இது குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் தன்னுடைய மகன்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கான பலகாரங்களை ஊட்டி மகிழ்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அம்மா என்றால் சும்மாவா? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
மேலும் இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், சைக்கிளிங் போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். இதற்குகும் ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!