நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் யோகிபாபு, கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் வஸந்த் ரவி, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்.
ஜெயிலர் படத்தை தொடந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.
மேலம் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்திருந்த நிலையில் கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு தனது இரு மகன்களுடனும் இணைந்து தனது தந்தையின் வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றார்.
அவ்வப்போது இருவரும் மகன்கள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா பொங்கலை அப்பா அம்மா உடன் கொண்டாடி இருக்கிறார்.தற்போது ஐஸ்வர்யா பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனது மகன்கள் உடன் சேர்ந்து ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.அது தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!