• Sep 21 2024

15-வது ஐபிஎல் தொடர் நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்திற்கு தனது பிள்ளைகளுடன் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழில் பிரபல நடிகரான தனுஷைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இவர்களின் அறிவிப்பானது பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருபினும் இதை எல்லாம் பொருட் படுத்தாது இருவரும் தமது கெரியரில் கவனம் செலுத்து வருகின்றனர். அத்தோடு தமது பிள்ளைகளுடன் இருவரும் நேரம் செலவழித்து வருகின்றனர்.

அந்த வகையில் 15-வது ஐபிஎல் தொடர் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன.

இதில் முதல் இரண்டு இடத்தை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் நேற்று மோதின. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியைக் காண ஐஸ்வர்யா தனது மகன்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இதைப்பார்த்த ரசிகர்கள் யாத்ராவை பார்க்கும் போது தனுஷை பார்ப்பது போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement