• Sep 20 2024

மழை, வெயில் பார்க்காமல் லால் சலாம் படத்திற்காக உழைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை போன்ற படங்களை  படங்களை இயக்கியதைத் தொடர்ந்து தற்பொழுது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம்  கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

 இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.படத்தின் சூட்டிங் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

 விளையாட்டை மையமாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், லால் சலாம் படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை இரண்டு படங்களும் சிறப்பான திரைக்கதையை கொண்டிருந்ததாக பாராட்டப்பட்டன. 


இந்தப் படத்திற்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. தற்போது ரஜினியின் போர்ஷன்களை படமாக்கி வரும் அவர், முன்னதாக சரியான திட்டமிடலுடன் அவர் இல்லாத நேரத்தில், மற்றவர்களின் போர்ஷன்களையும் சிறப்பாக படமாக்கியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்பு ரஜினியுடன் லால் சலாம் சூட்டிங் புகைப்படத்தை வெளியிட்ட அவர், தான் தன்னுடைய தந்தையை இயக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிகமான வியர்வையுடன் அவர் கறுத்து காணப்படுகிறார். 


கறுப்பு கண்ணாடியுடன் அவர் இந்தப் புகைப்படத்தில் இருந்தாலும் வழக்கமான அவரது க்ளோ இந்தப் புகைப்படத்தில் மிஸ்ஸிங். மழை, வெயில் பார்க்காமல் அவர் லால் சலாம் படத்திற்காக உழைத்து வருகிறார் என இந்தப் புகைப்படத்தில் தெரிகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement