• Sep 20 2024

மூர்த்தியிடம் மீண்டும் திட்டு வாங்கிய ஐஸ்வர்யா- குழந்தைக்கு பால் கொடுக்கும் படி தனத்தை வற்புறுத்திய அவரது அம்மா- செம சந்தோஷத்தில் முல்லை மற்றும் மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தனம் குழந்தையோடு இருக்கும் போது முல்லையும் மீனாவும் வந்து திருச்சியில் கவர்மென்ட் எக்ஸ்ஷாம் நடக்கப்போகுது, அந்த எக்ஸாம் முல்லை எழுதப் போறாங்க என்று சொல்லி நாம மூன்று பேரும் போய் ரீட்மென்ட் பண்ணிட்டு வரலாம் என்று சொல்ல தனம் இதெல்லாம் சரிப்பட்டு வாற மாதிரி எனக்கும் தெரில என்று சொல்ல மீனாவும் முல்லையம் அதெல்லாம் சரியாகும் என்கின்றார்.

பின்னர் தனம் தன்னுடைய அம்மா மற்றும் ஐஸ்வர்யாவுடன் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது தனத்தின் குழந்தை அழ அவர் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு சொல்ல தனம் தன்னால் முடியாது என்று சொல்ல அவர் விடாது பால் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார். தனம் சமாளிக்க முடியாமல் இருக்க முல்லை வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு போகின்றார்.


இதைப் பார்த்த தனத்தின் அம்மா அதிர்ச்சியடைவதோடு உன் குழந்தைக்கு அவ எதுக்கு பால் கொடுக்கனும் என்று சொல்ல ஐஸ்வர்யா, அக்கா ரொம்ப களைப்பா இருக்கிறாங்க போல அதான் முல்லையக்கா கொடுக்கிறாங்க, இதில என்ன இருக்கு தேவைப்பட்டால் நானும் கொடுப்பேன் இது எல்லாம் ஒரு விஷயம் என்று பேசிட்டு இருக்கிறீங்க என்று சொல்லிவிட்டு போகின்றார்.

மறுபுறம் ஜீவா வந்ததும் மீனா, ஜீவா வீட்டிலையே இருக்க போஃர் அடிக்குது எங்கையாவது போய்ட்டு வரனும் போல இருக்கு என்று சொல்ல ஜீவா சினிமாவுக்கு போலாமா என்று கேட்க மீனா அதெல்லாம் வேணாம் சினிமாவுக்கு போனால் காலைல எழும்ப முடியாது என்று சொல்ல ஜுவா அப்போ ஹொட்டலுக்கு போகலாமா என்று கேட்க அம்மா வீட்டில தான் சமைச்சிட்டாங்களே என்று சொல்கின்றார்.

பின்னர் இப்பிடி போற மாதிரி எல்லாம் வேணாம் துார எங்கையாவது போகனும் என்று சொல்கின்றார்.அத்தோடு முல்லை எக்ஸாமுக்காக திருச்சி போறாங்க அவங்க கூட நானும் போய்ட்டு வருகின்றேன் என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த ஜுவா பின்னர் போய்ட்டு வரும் படி சொல்கின்றார்.


இதே போல கதிர் வந்ததும் முல்லையும் தான் கவர்மென்ட் வேலைக்கு போகனும் என்று உங்க கிட்ட சொல்லி இருக்கிறேன் தானே என்று சொல்ல கதிர் நீ என் கிட்ட சொன்னதே இல்லை என்று சொல்ல, முல்லை நான் சொல்லுறது எல்லாம் இப்போ நீங்க சீக்கிரமாவே மறந்திடுறீங்க என்று சொல்ல கதிர் சரி நீ சொன்ன நான் தான் மறந்திட்டேன் என்று சொல்கின்றார்.

அப்போது முல்லை தான் கவர்மென்ட் வேலைக்கு போகனும் எக்ஸாம் திருச்சியில் நடக்கப் போகுது போகனும் என்று சொல்கின்றார். அப்போது கதிர் எக்ஸாமுக்கு தானே சரி போய்ட்டு வா வீட்டில நான்  பேசிறேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்டு முல்லையும் சந்தோசப்படுகின்றார். அடுத்து வீட்டில் தனத்தின் குழந்தையை தனத்தின் அம்மாவும் முல்லையின் குழந்தையை முல்லையின் அம்மாவும் ஐஸ்வர்யாவின் குழந்தையை கஸ்துாரியும் வைத்திருக்கின்றனர்.


 அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தையை தரச் சொல்லி நிற்கின்றார். வீடியோ எடுத்துப் போடனும் என்று சொல்ல கஸ்துாரி குழந்தையைக் கொடுக்க மறுக்கின்றார். இருந்தாலும் ஐஸ்வர்யா குழந்தையை தந்தே ஆகனும் என்று அடம் பிடிக்க அங்கு வரும் மூர்த்தி ஐஸ்வர்யாவைத் திட்டி விடடுச் செல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட்  முடிவடைகின்றது.

Advertisement

Advertisement