• Sep 20 2024

சூர்யா வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் உறைந்து நின்ற கௌதம்- உண்மை எல்லாம் சொல்லுவாரா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் 3 பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வரர் வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எவ்வாறு எல்லாம் போராடுகிறார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சீரியலில் பல புது முகங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்கள் இதில் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் ஐஸ்வர்யாவை சூர்யாவிற்குத் தான் திருமணம் முடிப்பதற்காக பேசியிருந்தார்கள். ஆனால் கௌதம் செய்த சூழ்ச்சியினால் ஐஸ்வர்யா கல்யாண மண்டபத்தை விட்டு ஓடியதால் அவருக்கு பதிலாக மகாவை சூர்யா திருமணம் முடித்துள்ளார்.


மேலும் கௌதம் தன்னை ஏமாற்றுவது தெரியாமல் ஐஸ்வர்யாவும் கௌதமை நம்பிக் கொண்டிருக்கின்றார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா கௌதமுக்கு போன் செய்து உங்க வீட்டு பங்சனுக்கு வரச்சொல்லி பாட்டி கோஃல் பண்ணியிருக்கிறாங்க நாங்க எல்லோருமே வாறோம் என்கின்றார்.

கௌதம் யார் கிட்டையே போன் பேசிட்டு இருப்பதைப் பார்த்த அவரது அம்மா போனைப் பறித்து உனக்கு நல்ல பெரிய இடத்தில கல்யாணம் பேசியிருக்கு இப்படியெல்லாம் பண்ணாத என்று சொல்ல ஐஸ்வர்யா இந்தக் கல்யாணம் நடக்க விடமே மாட்டேன் தடுத்தே தீருவேன் என கௌதம் வீட்டிற்கு வருகின்றார். ஐஸ்வர்யாவைப் பார்த்த கௌதம் அதிர்ச்சியில் உறைகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோா முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement