• Sep 20 2024

மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்டு அழுத ஐஸ்வர்யா- என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் கண்ணன்- கதிர் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யாவுக்கு வயிற்று வலி வந்து விட்டதால் தனம் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் விட்டார். இதனால் வீட்டில் மூர்த்தி முல்லை கதிர் ஆகியோர் இருந்து பேசிட்டு இருக்கின்றனர். அப்போது கதிர் கண்ணனை எப்படியாவது வெளியில் எடுக்கனும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.


அந்த நேரம் தனம் போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் முல்லையிடம் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் ஐஸ்வர்யாவின் குழந்தையைப் பார்க்க கதிரும் முல்லையும் செல்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா கண்ணன் பற்றி விசரித்து அழுகின்றார்.

இதனால் கடுப்பான கஸ்துாரி அத்தாச்சி கடுப்பாகி உன்னால தான் கண்ணன் இவ்வளவு கடன்காரன் ஆனான் செய்யிறது எல்லாம் செய்திட்டு இழுதா எல்லாம் சரி ஆகிடுமா என ஐஸ்வர்யாவை கண்டபாட்டுக்கு திட்ட ஐஸ்வர்யா அழுகின்றார். தனமும் முல்லையும் சமாதானப்படுததுகின்றனர்.


தொடர்ந்து மீனாவும் ஜீவாவும் வந்து ஐஸ்வர்யாவைப் பார்த்துக் கொண்டிருக்க மூர்த்தியும் வருகின்றார். அப்போது ஐஸ்வர்யா மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கின்றார். எப்படியாவது கண்ணனை வெளியில் எடுக்குமாறும் சொல்கின்றார். மறுபுறம் ஜீவாவும் கதிரும் ஜெயிலுக்கு சென்று கண்ணனிடம் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்கின்றனர். இதனால் கண்ணன் சந்தோஷப்பட்டு அழுகின்றார்.வீட்டுக்கு வரும் கதிர் எப்படியாவது கண்ணனை வெளியில் எடுக்க வேண்டும் என்றும் சொல்கின்றார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement