தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர தன்னுடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குறித்து பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், தனுஷை பிறந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குநர் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலைத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம்.
அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், "தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்துவிடாதே" என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
ஆனால் உண்மையில் ரஜினியை மாலைத்தீவு அனுப்பிவைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என்று தகவல் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!