• Sep 21 2024

2-ஆவது திருமணத்தில் உறுதியாக இருக்கும் ஐஸ்வர்யா... கோபத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிய ரஜினி.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இவ்வாறு இருக்கையில்  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில்  தெரிவித்தனர். இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்தோடு குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றிணையவில்லை. இன்றுவரை இருவரும் பிரிந்து தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். 

வழக்கமாக ஓய்வு நேரங்களில் இமயமலைக்கோ இல்லாவிடின் கோயில்களுக்கோ செல்லும் ரஜினி ஏன் இந்த முறை மாலத்தீவுக்கு சென்றிருக்கின்றார் எனப் பலரும் யோசித்திருந்தனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் மாலத்தீவு விசிட்டுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியத்தை வீடியோ ஒன்றின் மூலமாக போட்டுடைத்துள்ளார்.

அந்தவகையில் குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து போன ரஜினி, மன அமைதியைத் தேடித்தான் மாலத்தீவுக்கு சென்று இருப்பதாக பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, ரஜினியிடம் போய் தான் உதவி இயக்குநர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியதாகவும், இதனால் குழப்பமான ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு கிளம்பி சென்றுவிட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது மகள் ஐஸ்வர்யாவிற்கு ஒரு சில அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறாராம் ரஜினி. அதாவது "தனுஷ் விவாகரத்து பெறும் ஐடியாவில் இல்லை. அவ்வாறான ஒரு ஐடியா தனுஷிற்கு இருந்திருந்தால் உன் மகன்கள் மீது இவ்வளவு பாசமாக இருக்க மாட்டார். அவர் மகன்கள் மீது காட்டும் பாசம் என்றோ ஒருநாள் உன்மீதும் நேசமாக மாறும், நீ பொறுமையா இரு, இதுபோன்று தவறான முடிவெல்லாம் இப்போ எடுக்காதே" எனக் கூறியிருக்கின்றார். 

ரஜினியைப் பொறுத்தவரையில் அவர் வழக்கமாக எங்கு சென்றாலும் மகள் ஐஸ்வர்யா உடன் தான் செல்வார். ஆனால் இம்முறை மாலத்தீவுக்கு தனியாக போனதற்கு காரணமும் இதுதான் எனக்கூறிப் புதுக்குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement