• Sep 20 2024

கண்ணன் வீட்டுக்கு வந்த கதிரை அழ வைத்த ஐஸ்வர்யா- ஜீவாவைத் தேடிப்போன தனத்திற்கு மீனா கொடுத்த பதிலடி - கடும் கோபத்தில் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

மூர்த்தியிடம் வந்து கதிர் எப்பிடி இருக்கிறீங்க என்று கேட்க மூர்த்தி கதிரைத் திட்டுகின்றார். இதனால் தனம் ஏன் மாமா திட்டிறீங்க, அவன் நல்லா இருக்கிறீங்களா என்று தானே கேட்டான என்று சொல்ல மூர்த்தி தனத்தையும் திட்டி விட்டு கடைக்கு எழுந்து சென்று விடுகின்றார். பின்னர் தனமும் கதிரும் என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர்.


அதன் படி கதிர் முதலில் யாருக்கும் சொல்லாமல் கண்ணன் வீட்டை செல்கின்றார். அப்போது நான உங்களை எல்லாம் நிறைய இடம் தேடினேன் என்று சொல்ல, ஐஸ்வர்யா ஏன் மாமா நாங்க ரெண்டு பேரும் ரோட்டில சுத்திட்டு இருப்போம்் என்று நினைச்சீங்களா எனக்கு அம்மா அப்பா தான் இல்லை ஆனால் வீடு இருக்கு என்கிறார். அத்தோடு நீங்களும் முல்லையக்காவும் வீட்டை விட்டு போனது எல்லோரும் வந்து கூப்பிட்டாங்களே நீங்க வந்தீங்களா என முகத்திலடித்தது போல நிறைய கேள்விகளை கேட்கிறார்.


அத்தோடு இனி வர மாட்டோம் தனியாத் தான் இருக்கப் போறோம். கண்ணனை யாராலும் இனிமேல் திட்டமுடியாது மாமா என்று சொல்ல கதிர் கண்கலங்கி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் ஜீவாவைத் தேடி தனம் வரும் போது அவரது மாமனார் வாசலில் இருக்க ஜீவா இருக்கிறானா என்று கேட்க தெரியலையே அவர் எங்கையோ போய்ட்டார் போல என சொல்ல மீனா வந்து தனத்தை ஜீவாவிடம் கூட்டிச் செல்கின்றார்.


ஜீவாவைப் பார்த்ததும் தனம் அழ ஜீவாவும் அழுகின்றார். பின்னர் தனம் வீட்டுக்கு வா ஜீவா என கெஞ்சி அழைக்க ஜீவா இனிமேல் வந்தால் நல்லா இருக்காது நான் வரல அண்ணி, நீங்க அழாதிங்க நீங்க அழ கஸ்டமாக இருக்கு என்று சொல்ல தனம் மீனாவிடம் சென்று ஜீவாவுக்கு புரிய வைக்கும் படி கூறுகின்றார்.ஆனால் மீனா ஜீவா என்ன முடிவு எடுக்கிறானோ அது தான் என் முடிவு என்றும் சொல்கிறார். அத்தோடு ஜனார்த்னன் மாப்பிள்ளை இப்போ கோபத்தில இருக்காரு சரியானவுடனே வந்திருவாரு என்று சொல்ல தனம் அங்கிருந்து கிளம்பி போகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement