• Sep 21 2024

கண்ணன் வட்டிக்கு பணம் வாங்கியதால் தனம் எடுத்த முடிவு- அதிர்ச்சியில் உறைந்த ஐஸ்வர்யா - விடாமல் கேள்வி கேட்டும் முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தன்திற்கு கண்ணன் வட்டிக்கு பணம் வாங்கிய விஷயம் தெரிந்து விட்டது. இதனால் தனம், கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் திட்டிக் கொண்டிருக்கின்றார். அப்போது எவ்வளவு பணம் வாங்கியிருக்காங்க என்று கேட்ட போது அத்தாச்சி இரண்டு லட்சம் பணம் வாங்கியிருக்கிறாங்க வட்டியுடன் சேர்ந்து 50 தந்திட்டாங்க என்று சொல்கின்றார்.


மீதிப் பணம் 1 லட்சத்து 75 ஆயிரம் தரணும் என்று சொல்கின்றார்.இதைக் கேட்ட தனமும் முல்லையும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது தனம் இந்த விஷயத்தை மாமா கிட்ட சொல்லிடாதீங்க நானே மீதிப் பணத்தைத் தருகிறேன் என்று சொல்கின்றார். அப்போது அத்தாச்சி நீயே பொறுப்பு நிக்கிறப்போ நான் எதுக்கு சொல்லப் போகிறேன் என்று சொல்கின்றார்.

பின்னர் மீனா வீட்டில் எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது மீனாவின் அப்பா புது வீடு ஒன்று வந்திருக்கு அதை வாங்கலாம் என்று யோசிக்கிறேன். அதையும் கயல் பேரில் தான் வாங்கப் போறேன் என்று சொல்ல மீனா அதெல்லாம் வேணாம்பா இன்னும் கொஞ்ச நாள்ல நாங்க அங்க போய்டுவோம் என் சொல்கின்றார்.


இதைக் கேட்டு கடுப்பான ஜீவா அங்கிருந்து எழும்பிச் சென்று விடுகின்றார்.அப்போது மீனாவின் அப்பா மாப்பிள்ளையே சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்ட போல இருக்கே எனத் திட்டுகின்றார். இருந்தாலும் மீனா நாங்க எப்பிடியும் அங்க கிளம்பி போய்டுவோம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றார்.


தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கண்ணனும் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் முல்லை, கண்ணனிடம் சம்பளம் எல்லாம் ஈ எம் ஐ கட்டியாச்சு என்று சொன்னீங்க,அப்பிறம் எப்பிடி அத்தாச்சிக்கு பணம் கொடுத்தீங்க என்று சொல்ல கண்ணனும் ஐஸ்வர்யாவும் திரும்ப முல்லையிடம் பொய் சொல்ல முல்லை, எனக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிச்சு என்று வையுங்க உங்களை சும்மா விடமாட்டேன் என்று திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement