• Sep 20 2024

மலையாள இயக்குநரிடம் படவாய்ப்பு இருக்கின்றதா எனக் கேட்ட அஜித்- ஆனால் அதற்குள் நடந்த சோகம்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் அஜித். இவர் குறித்த தகவல்ககள் சமீபகாலமாக வெளியாகி வருவதால் இவர் மீதான மரியைானது ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது எனலாம்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஏ.கே 61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இது தவிர துப்பாக்கிச் சுடுதல் வேல்ட் டூர் செல்லுதல் போன்றவற்றில் பிஸியாகவும் இருந்த வருகின்றார்.

மேலும் மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படத்தை மலையாள இயக்குநரான சாச்சி இயக்கி இருந்ததோடு இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனை அடுத்து “அய்யப்பனும் கோஷியும் படத்தைப் பார்த்த அஜித் போன் செய்து பாராட்டினார். தனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என என் கணவர் சாச்சியிடம் கேட்டார். தான் இப்போதுதான் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், விரைவில் சந்திக்கிறேன் என்றும் சாச்சி கூறினார். ஆனால் அந்த சந்திப்பு நடக்காமலே போய்விட்டது” என சாச்சியின் மனைவி பிரபல் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் சாச்சி கடந்த ஆண்டு திடீரென இறப்புக்குள்ளானது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு அற்புதமான இயக்குநரை இழந்து விட்டோமே எனக் கூறி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement