நடிகர் அஜித்தின் 62 படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால், எதிர்பாராதவிதமாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கியது லைகா புரோடக்ஷன்ஸ். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், இதுவரை ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முதலில் ஒன்லைன் கேட்ட அஜித் உடனே ஓக்கே சொன்னதாகவும், ஆனால், மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியானதும் அபிஸியலாக அறிவிக்கலாம் எனக் கூறிவிட்டாராம். லைகா தரப்பிலும் அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதாம்.
அதன்படி மார்ச் மாதத்திற்குள் ஏகே 62 கதையை முடித்துவிட்டு ஏப்ரலில் ஷூட்டிங் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஏகே 62 படத்தை முடித்துவிட்டு உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல அஜித் ப்ளான் செய்திருந்ததார். அதனால் ஏகே 62 படப்பிடிப்பை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அஜித் மகிழ் திருமேனிக்கு கண்டீஷன் போட்டிருந்தாராம்.
ஆனால், எதிர்பாராதவிதமாக தனது தந்தை சுப்ரமணியன் இறந்துவிட்டதால், பைக் டூர் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டாராம் அஜித். அதனால் ஏகே 62 ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னும் பொறுமையாக பார்த்து வருகிறதாம் படக்குழு.
ஆனாலும், ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டும் என லைகா திட்டமிட்டுள்ளதாம். படப்பிடிப்பை அஜித் விரும்பும் தேதியில் ஆரம்பிக்கலாம் எனவும் லைகா கூறியுள்ளது. இருப்பினும் ஏகே 62 ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தந்தை கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து ஏகே 62 படத்தின் அப்டேட் முதல் ஷூட்டிங் வரை எல்லாமே மாற்றமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!