• Sep 20 2024

எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த ராஜசேகர் பச்சையை நேரில் சந்தித்து பாராட்டிய அஜித்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமம் கோவளம். அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர்

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் இருந்து தன்னுடைய சாதனை பயணத்தைத் தொடங்கிய ராஜசேகர் பச்சை 8,850 மீட்டர் உயரத்தை கடந்த மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். ஒரு மாதத்திற்கும் மேல் கடும் இன்னல்களுக்கு மத்தியில் விடாமுயற்சியோடு எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தார்.


தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர்தான். இதனால் இவருக்கு பிரபலங்கள் குறிப்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இவரை நேரில் வழவழைத்து, வாழ்த்து கூறி கௌரவித்தார்.

இந்நிலையில், இவரை அஜித் நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எப்போதுமே விளையாட்டு வீரர்களின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் அஜித், ராஜசேகர் பச்சையை தன்னுடைய நியூ லுக்கில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் போது எடுத்துக்கொண்ட போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார் தல. இவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.அஜித்குமார் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான ஷூட்டிங் அடுத்த வாரம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது


Advertisement

Advertisement