தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றது.
அஜித்தின் 61வது படம் மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறுப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்தார். அத்தோடு பல நாடுகளில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ஐரோப்பா பயணத்தை அஜித் முடித்து வந்த அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில் அஜித் லண்டனுக்கு சென்ற போது அங்கு லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனை சந்தித்துள்ளாராம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படுகிறது.
Listen News!