• Sep 19 2024

அஜித் மருமகன் இல்லை மகன், சொன்ன வாக்கை காப்பாற்றினார்- உண்மையை சொல்லிய ஷாலினியின் அப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் அஜித் குமார் . ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்த அஜித் பின்னர் கடந்த 2000 ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் 

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் .இப்படி இருக்கும் நிலையில் கல்யாணம் ஆகும் போது கொடுத்த வாக்கை அஜித் காப்பாற்றி விட்டார் என்று 23 வருடங்களுக்கு கழித்து பேசி உள்ளார் அஜித்தின் மாமனார் . 


இதனால் காதலிக்கும் போதே குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார். பின்னர் இருவருக்கும் ஜாதகம் சரி வருகிறதா என்று பார்த்தோம் ஆனால் பத்து பொருத்தம் பக்காவாக இருந்தது . இதிலேயே தெரிந்தது இவர்கள் இருவரும் எந்த அளவிற்கு காதலிக்கிறார்கள் என்று.

மேலும் உங்களுடைய பெண்ணை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று எனக்கு வாக்கு கொடுத்திருந்தார் அஜித் .அப்படி ஷாலினிக்கு திருமணமான போது நாங்கள் எல்லாம் எப்படி சந்தோசமாக இருந்தோமோ , அதே போன்று தான் இப்போதும் இருந்து வருகிறோம் 


அந்த அளவிற்கு என்னுடைய மகளையும் ,எங்களுடைய குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார் அஜித் . அவர் எனக்கு மருமகனே கிடையாது, இன்னொரு மகன் என்று தான் சொல்ல வேண்டும் என்று ஷாலினியின் அப்பா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement