தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத்தின் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்துள்ளார். இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகின்றது. இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார்.
அத்தோடு இப்படத்திற்காக அஜித்திற்கு நூறு கோடி சம்பளமாக பேசப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இன்று நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ள அஜித் பல போராட்டங்களை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அதாவது தன்னுடைய ஆரம்பகாலகட்டத்தில் பல அவமானங்களையும் போராட்டங்களையும் கடந்து வந்த அஜித் இன்று தன் கடின உழைப்பால் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதுமட்டுமல்லாது கார் பந்தயத்தில் நாட்டம் கொண்ட அஜித் அதன் காரணமாக பல விபத்துக்களை சந்தித்துள்ளார்.
இருப்பினும் அதையெல்லாம் தாண்டி தன் ஒவ்வொரு படத்திலும் தன் ரசிகர்களுக்காக சிறப்பாக நடித்து வருகின்றார் அஜித். இந்நிலையில் தற்போது பிரபல மூத்த நடிகர் ராஜேஷ் அஜித்தை பற்றி பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.
அந்தவகையில் அஜித்துடன் ரெட், வரலாறு, சிட்டிசன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ராஜேஷ். இவர் கூறுகையில் "அஜித்துடன் நான் ஆரம்பகாலத்தில் சில படங்களில் நடித்துள்ளேன். அவர் மிகவும் இனிமையான மனிதர். அனைவரிடமும் நன்றாக பேசுவார்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "ஒருமுறை என்னிடம், எவ்வளவு நடித்தாலும் படமே ஓடமாட்டேங்குது சார் எனக் கூறிக் கவலைப்பட்டார். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெமினி கணேசனுக்கு பிறகு அஜித்திற்கு தான் மிகவும் வசீகரமான தோற்றம் உள்ளது" என கூறியுள்ளார் ராஜேஷ். இந்நிலையில் அஜித்தை பற்றி இவர் கூறிய இந்த விஷயமானது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Listen News!