தமிழ் சினிமாவில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் ஜோதிகா. இவர் இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.
படங்களிலில் பிஸியாக நடித்து வந்த காலத்தில் நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஜோதிகா ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய விடயம் வைரலாகி வருகின்றது. அதாவது நான் இப்போ இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் சவால் விடுவேன். யாரையும் ரஜினி சேர் மாதிரி ஒரு பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்க படங்களில் நடிக்க மாட்டாங்க ஆனால் ரஜினி சேர் சந்திரமுகி படத்தில அதை பண்ணினாரு. இவங்க யாராவது அவரை மாதிரி பண்ணினால் அவங்களும் சிறந்த நடிகர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் எனக் கூறியதைக் காணலாம்.
Listen News!