தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் கடந்த 11ஆம் தேதி வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படமும் வெளியானது. அஜித் மற்றும் விஜய்யின் கடைசி படங்களான வலிமை மற்றும் பீஸ்ட் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எனவே தன் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருவரும் இருந்தனர்.இவ்வாறுஇருக்கையில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த வாரம் வெளியானது.எனினும் இதையடுத்து இரு படங்களும் அவரவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது
இருப்பினும் இரண்டு படங்களின் வசூலும் அமோகமாகவே இருக்கின்றது. இவ்வாறுஇருக்கையில் கடந்த வாரம் வாரிசு படக்குழுவினர் பொங்கல் வின்னர் என்ற வாசகத்தோடு கூடிய போஸ்ட்டரை வெளியிட்டனர். இதையடுத்து துணிவு படக்குழுவினர் ரியல் வின்னர் என்ற வாசகத்தோடு போஸ்ட்டரை வெளியிட்டனர்.
எனினும் தற்போது இதைப்பற்றி துணிவு படத்தின் இயக்குனர் வினோத் பேசுகையில், இரண்டு படங்களும் வெற்றிபெறவேண்டும் என நான் ஏற்கனவே பேட்டியில் பதிவு செய்திருந்தேன். அதுபோல தான் தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றுள்ளது.
இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கின்றது என்றார் வினோத். இவ்வாறுஇருக்கையில் என்னதான் இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இரு படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!