தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருப்பதாக கடந்த வருடமே அறிவிப்பு வந்தது. அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் தற்போது திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது மகிழ் திருமேனி தான் AK62 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது.
மகிழ் திருமேனி எழுதியிருக்கும் கதை அஜித்துக்கு பிடித்து இருந்ததால் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் தற்போது மேலும் ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறாராம் அஜித்.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் வகையில் திரைக்கதை வேண்டும் என அஜித் கூறி இருக்கிறாராம். அதற்கான பணிகளில் இயக்குநர் தற்போது படு பிஸியாக இருக்கிறாராம். என்று சொல்லப்படுகிறது.
அந்த வேலை முடிந்தபிறகு தான் லைகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!