சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு டாப் ஹீரோயின் அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை அனிகா சுரேந்தர். போட்டோஷூட் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவரின் வடிவான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி விட்டார் அனிகா. இரண்டு படங்களிலுமே அஜித்துக்கு மகளாக நடித்திருந்ததால் உண்மையிலேயே அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
இன்றுவரை அனிகாவை ஒரு ஹீரோயினாகவே மக்கள் பார்க்க வில்லை. ஒரு குழந்தையாகவே பார்க்கின்றனர். அதன் காரணமாகவே அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுழிக்கின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக அனிகா ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக முத்தக்காட்சியில் நடித்து அனைவரையும் திகிலடைய வைத்தார். இவரா இப்படி? பிஞ்சிலே பளுத்தது என்றெல்லாம் கமெண்ட்களை அள்ளி வீசினர்.
இருந்தாலும் நடிக்க வந்துவிட்டால் இந்த மாதிரியான விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்று நன்கு தெரிந்து வைத்துக் கொண்ட அனிகா அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தனது கவர்ச்சிக்கரமான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில் பார்பி டால் மாதிரியான தோற்றத்தில் கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு விதவிதமான போஸ்களில் தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அனிகாவை ரசித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!