தமிழ் சினிமாவில் பல படங்களிலும் பிசியாக நடித்து வந்த நடிகர் மனோபாலா சமீபகாலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதாவது கடந்த நான்கு மாதமாக வீட்டில் இருந்தே கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லீரல் பிரச்சனை தீவிரமானதை அடுத்து அவதிப்பட்டு வந்த மனோபாலா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய பிரபல இயக்குநரான எச்.வினோத் அவர்கள் மனோபாலாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது இறங்கலினைத் தெரிவித்து இருக்கின்றார்.
Listen News!