• Sep 20 2024

அழகியே உன்னைப் போல அதிசயம் இல்லையே- நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகின்றார்.இறுதியாக தமிழில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் மகாநடிகை. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது.மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். 


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட கீர்த்தி தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களிலே மட்டுமே நடித்து வருகிறார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றார். அந்த வகையில் தற்பொழுது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement