• Sep 20 2024

'ஐயோ என்னை கழுத்த நெரித்து கொலை பண்ண பாக்குறாங்க' - கதறி அழுத குக் வித் கோமாளி தீபா...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா சங்கர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.


தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியால் அதிகம் பிரபலமானவர்கள் பலர் அதில் ஒருவர் தான் தீபா. பார்க்க உடல் பருமனாக காணப்படும் இவர் குணத்தில் ஒரு குழந்தையை போலவே இருப்பார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி போல ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் புதிய தொகுப்பாளராக பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தீபாவை பாலியில் பூனையின் புழுக்கையில் இருந்து செய்யப்பட்ட காபியை தொகுப்பாளர் குடிக்க கூற அவர் மறுக்கிறார்.

இதனால் அங்கு இருக்கும் பெசென்ட் ரவி தீபாவின் கழுத்தைப் பிடித்து அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர், ஐயோ என் கழுத்தை பிடித்து நெறிக்கிறாங்க, என்னை கொலை பண்ண பார்க்குறாரு.

நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று கதறுகிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Advertisement

Advertisement