90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.
இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த இவருக்கு 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இரு குழந்தைகளை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். அத்தோடு சில நாட்களுக்கு முன் சினேகா - பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் தீயாய் பரவியது.
ஆனால் அதெல்லாம் பொய் என்று பிரச்சனா பதிலளித்திருந்தார். இவ்வாறுஇருக்கையில் சினேகா - பிரசன்னா திருமணத்தில் மிகப்பெரிய ரகசியம் ஒன்று மறைந்துள்ளது. அதாவது இருவரும் படங்களில் நடித்து வந்த போது காதலில் விழுந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூற பிரசன்னா வீட்டில் சம்மதிக்கவில்லை. இதன் பின் எப்படியோ சமாளித்துவிட்ட பிரசன்னா சினேகாவை 2012ல் திருமணம் செய்துள்ளார். அதுவும் என்னை வானகரம் ஸ்ரீவெங்கடாசலபதி மண்டபத்தில் நடந்துள்ளது.
ஆனால் சினேகா ஒரு நாயுடு என்பதாலும் பிரசன்னா பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் என்பதால் இருமுறை இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும் இரு சாதி முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களுடன் இரு முறை சினேகாவுக்கு பிரசன்னா தாலி கட்டியுள்ளார்.
Listen News!