69-வது தேசிய விருது வழங்கும் விழா குறித்து கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன. விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன.அதன் படி இன்றைய தினம் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றும் முதல் நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுர் பெற்றுள்ளார்.
இதனால் திரையலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தமது வாழ்ததுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் புஷ்பா படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கி உள்ளார். செம்மரம் கடத்தும் தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் கெத்து காட்டியது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் கவனம் செலுத்தி வருகின்றார்.இந்த விருதைப் பெறுவதற்காக அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியுடன் வந்திருந்தார். விருதை பெற்ற அல்லு அர்ஜூன் இந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, நான் உண்மையிலேயே தாழ்மையும் பெருமையும் அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!