நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. செம்மரக் கடத்தல்காரனாக இப்படத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.இப்படம் கிட்டத்தட்ட 350 கோடிக்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்து அபார சாதனை படைத்தது.
இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்ததோடு இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
விஜய்சேதுபதி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என்கிற பக்கா பிளான்களை போட்டு வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்காக கருப்பு சட்டையை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபிளவர் இல்லை ஃபயரு என அந்த போட்டோவை பார்த்ததும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ்…விவாகரத்துக்கு காரணம் இவரா?..வெளியாகிய புகைப்படங்கள்..!
- அஜித் செய்த அந்தச் செயல்…வைரலாகும் வீடியோ…என்ன ஒரு மனுஷனப்பா..!
- அஜித்திற்குப் பதிலாக வந்த யாஷிகா…எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!