தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் புஷ்பா.இந்த திரைப்படம் கடந்த டிசெம்பர் 18 வெளியானது.இத்திரைப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியது. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்னணி நடிகையான சமந்தா இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஃபான் இந்திய திரைப்படமாக வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டையை கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அல்லு அர்ஜுனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் புஷ்பா கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும் போது எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சொல்வதாக இரண்டாம் பாகம் உருவாகின்றது. இதற்காக ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாக கூறப்படுகின்றது. இதன் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பிற செய்திகள்
- ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த RK சுரேஷ்; இதுதான் காரணமா?
- மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!
- குக்வித்கோமாளி பாலாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா..? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
- வாரிசு படத்திற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம்-இத்தனை கோடியா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!