• Sep 21 2024

ஏற்கனவே 2 காதல் சர்ச்சை-தற்போது 3வதாக க்ரஷா..? விஜய் பட நடிகையின் புதிய தகவல்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அனன்யா பாண்டே.இவர் 2019 ஆண்டு ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் திரையுலகிற்கு என்றி கொடுத்தார்.

அத்தோடு இவர் பிரபல நடிகரான் சங்கி பாண்டேவின் மகளும் ஆவார்.தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு விரைவில் வரவுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டே. இதுதொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும் இதில்தான் தன்னுடைய லேட்டஸ்ட் க்ரஷ் குறித்து வெளிப்படையாக சொல்லியுள்ளார் அனன்யா பாண்டே.

அதில் பேசியுள்ள அனன்யா பாண்டே. இந்த கிரகத்திலேயே கொஞ்சம் கூட நேர்மையே இல்லாத ஆள் நான்தான் என தெரிவித்துள்ளார். மேலும் இஷான் கட்டர் உடனான ரிலேஷன்ஷிப் மற்றும் கார்த்திக் ஆர்யன் உடன் வரும் வதந்திகள் பற்றி பேச அனன்யா மறுத்துவிட்டார்.

இருப்பினும் தன்னுடைய புதிய க்ரஷ், ஆதித்ய ராய் கபூர்தான் என்றும் அவர் ஹாட்டாக இருப்பதாக தனக்கு தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை அனன்யா பாண்டேவும் பங்கேற்றுள்ள ப்ரமோக்கள் வெளியாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement