• Sep 21 2024

எப்போதும் அவர் படங்கள் என்றால் பெஃஸ்ட் ஷோ தான்- ஜெயிலர் படத்தைப் பார்த்த மாரிமுத்து கூறிய முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் இவருடன்  தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில படங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்த ரஜினிக்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.மேலும் படம் இன்றைய தினம் வெளியாவதை முன்னிட்டு ரஜினி இமயமலைக்குச் சென்றுள்ளார்.


இந்நிலையில் இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் குவித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்தப் படத்தைப் பார்த்த எதிர்நீச்சல் மாரிமுத்து இப்படத்தைப் பார்த்து புகழ்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது அவருக்கு எல்லாரும்தான் ரசிகர்கள் , உலகத்தில் ரஜினிக்கு ரசிகர் இல்லாதவர் யாரும் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.அத்தோடு தான் கல்லூரியில் படிக்கும்போது, ரிலீசாகும் படங்களின் முதல் ஷோக்களை பார்த்ததாகவும் அப்போது வெளியான மிஸ்டர் பாரத், மாவீரன் படங்களை பார்த்து தான் ரஜினி ரசிகராக மாறியதாகவும்  கூறியுள்ளார்.


 நன்றாக நடிக்கும் அனைவருக்கும் தான் ரசிகன்தான் என்றும் தனக்கு ரஜினியை மட்டுமில்லாமல் கமலையும் மிகவும் அதிகமாக பிடிக்கும் என்றும் மாரிமுத்து மேலும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement