விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ஆல்யா மானசா. இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த, சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலிலும் சஞ்சீவ் கயல் என்னும் சீரியலிலும் நடித்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஸ் என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐலா இன்றைய தினம் தனது 3வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அந்த வகையில் ஐலாவின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!