விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகவும் பேமஸ் ஆனது. ஆரம்பத்தில் பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அதே பெயரில் கல்லூரி பருவ நட்பை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியலை நடத்தினர். இந்த இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, அதில் நடித்த நடிகர், நடிகைகள் இன்று சின்னத்திரை சீரியல்களில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வந்தது. பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து உருவான இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீசனிலும் நடித்த நடிகர், நடிகைகளும் இன்ஸ்டாகிராம் மூலம் படு பேமஸ் ஆகிவிட்டனர்.
அப்படி கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பேமஸ் ஆனவர்கள் தான் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் முடிந்த சில நாட்களில் முதன் முதலாக லைவ்வில் பேசி இருக்கின்றனர்.அதில் எங்களுடைய திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்த எல்லொருக்கும் ரொம்ப நன்றி.திருமணம் முடிந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ராஜா வெற்றி பிரபுவை விட நான் பெரிய பொண்ணு எனக்கு 28 வயது என்று எல்லாம் சொல்லுறாங்க. ஆனால் அதெல்லாம் தப்பு.
ராஜாவுக்கு 27 வயது எனக்கு 26 வயது நான் ராஜா வெற்றி பிரபுவை விட சின்ன பொண்ணு அவனை விட தோற்றமாக இருப்பதால இப்படி சொல்லுறாங்க. ஆனால் நான் ராஜாவை விட சின்ன பொண்ணு யாரும் தப்பா சொல்லாதீங்க என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!