தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி விடுவார் நடிகை அமலாபால். சமீபத்தில் அவர் முன்னால் காதலர் பவிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கொண்டு மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அமலா பாலுக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என கூறி ஆதாரங்ளை சமர்ப்பித்து அவர் ஜாமீன் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமலா பால் அளித்த பேட்டியில் தான் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் அதற்காக வருத்தப்படவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
அத்தோடு அமலா பால் பிக் பாஸ் செல்வீர்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறார்.
"நான் போக மாட்டேன். அவர்கள் இமயமலையில் அல்லது காட்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால் நான் செல்ல தயார். அங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
"எந்த ரூல்ஸ், எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. நான் என்ன செய்கிறேனோ அதை அவர்கள் ரெக்கார்ட் செய்து கொள்ளட்டும்" என தெரிவித்து இருக்கிறார் அமலா பால்.
Listen News!