• Sep 20 2024

இரண்டாவது திருமணத்தை மறைத்து நாடகம் ஆடிய அமலாபால்-வெளியான ஆதாரங்களால் ஏற்பட்ட பரபரப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைந்து பொய் புகார் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னனி நடிகைகள் பட்டியலில் இருந்த போதே பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் தான்  நடிகை அமலாபால். இதன் பின்னர் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அமலா பால்  - ஏ.எல் விஜய் விஜய் விவாகரத்து விஷயம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது வரை இருவருமே தங்களின் விவாகரத்துக்கு காரணம் என்ன  என்பதை வெளிப்படையாக கூறியதே இல்லை.



ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கினார் அமலா பால். இதனைத்  தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களையே தேர்வு செய்து நடித்தார்.மேலும் அந்த வகையில் அவர் நடித்து வெளியான 'ஆடை' படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. 

எனினும் பலர் இவர் மிகவும் போல்டாக நடித்துள்ளார் என பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். அத்தோடு சமீபத்தில் அமலாபால் நடித்து, தயாரித்திருந்த 'கடவார்' படம்  ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை அமலா பால் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது முன்னல் காதலர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் தற்போது அமலா பாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர்  பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.



ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடைய காதலர் குறித்தும், அவருடன் திருமணம் ஆனது குறித்தும் வெளியில் காட்டி கொல்லாத அமலாபால், திருமணம் செய்தவர் மீது பாலியல் வழக்கு கொடுத்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே பவ்நிந்தர் சிங் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது, அது போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என அமலா பால் தெரிவித்தார்.

ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் வாழாமல் பொய் புகார்களை கூறி வருவதாக தெரிவித்துள்ள பாடகர் பவ்நிந்தர் சிங், அமலா பால் தன்னை திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.மேலும்  இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங்குக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.



அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி, கோலிவுட் தரப்பினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரம் இதற்க்கு அமலா பால் தரப்பிலிருந்து எந்த மாதிரியான விளக்கம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement