விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5இல்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்களே அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகத் தொடங்கி விட்டனர்.
இருப்பினும் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் அந்நிகழ்ச்சி முழுவதும் சுற்றினார். இந்த சீசனில் பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.
இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவனி மற்றும் அமீருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்த காரணத்தால் இவர்கள் இருவரும் பின்பு பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் வென்றனர்.
அத்தோடு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பல முறை தனது காதலை சொன்ன போதும் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஒரு கட்டத்தில், ஐ லவ் யூ சொல்லி அமீரின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தற்போது சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த க்யூட் ஜோடி ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் அமீர் கூறுகையில் "நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே அவரின் அன்பு, பாசத்தைப் பார்த்து காதலிக்கத் தொடங்கி விட்டேன். நாங்கள் 'நிச்சயம் விரைவில் திருமணம் செய்து கொள்வோம், ஆனால் அதற்கு இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்" என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினத்திற்காக அமீருடன் நெருக்கமாக இருக்கும் அழகான காதல் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இவர்களின் திருமணம் கூடிய சீக்கிரமே நடக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த ஜோடி விரைவில் ஒன்று சேரப்போவதை அறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!